Wednesday, December 8, 2010

எதிர்பாரா அழைப்பு



நாம் பிரிந்த பல நாட்களுக்கு பிறகு 
வான்திரையில் முகிலெழுதுக்களால் 
நீ எழுதிய என் பெயர் 
கவனிக்காத சிறு பொழுதில் 
சுவடின்றி மறைவது போல 
வளியோடு கரைந்து விட்டு 
வலியோடு உறைந்திருந்த 
ஒரு முன்னிரவு பொழுதில் 
கடலைடைந்த நீரின் மறுதலையாய்   
நீ என்னை தொடர்பு கொண்ட போதும் 
உனக்கு தேவையானதை 
என்னிடம் கேட்டு 
தெரிந்து கொண்ட போதும் 
நன்றி என கூறி 
தொடர்பை துண்டித்த போதும் 
என் குரலில் ஏற்பட்ட 
சிறு நடுக்கத்தை 
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

*பஞ்சவர்ண சோலையிலும் காணலாம்

Tuesday, November 23, 2010

உருவம் மாற்றும் பிம்பம்

http://panjavarnasolai.blogspot.com/2010/11/blog-post_24.html


சமீபமாக என்னை தொடர்ந்து வந்த 
ஒரு வெற்று பிம்பத்திற்கு 
உருவமிட விழைந்து 

பல உருவங்கள் புனைகையில் 
இடும் உருவத்தை எல்லாம் 
விழுங்கிக்கொண்டு வெற்று 
பிம்பமாகவே எட்டிப்பார்த்தது 

உறங்கும் போதும் மற்ற நேரத்திலும் 
பதுங்கி தனிமையில் சிக்குண்டால் 
என்னை விழுங்க முயல்கிறது 
என் கற்பனையை உண்டு வளர்ந்த 
அது நாளடைவில் என் உருவை 
மாற்ற முயல்கிறது 

இதனால் பெரும்பாலும் தனிமையை 
தவிர்த்து வந்த நான் 
தனித்திருக்க நேருகையில் அதன் 
செயப்படுபொருளாய் ஆகிறேன் 

விரைவில் என் உருவம் 
மாறிவிடும் அபாயம் உள்ளதால் 
இக்குறிப்புகளை அவசரமாய் 
இங்கு பதிகிறேன்

*நான் பஞ்சவர்ணசோலையில் பதிந்தது

Sunday, November 21, 2010

பஞ்சவர்ணசோலை: சிதைத்து கலைத்தவள்

பஞ்சவர்ணசோலை: சிதைத்து கலைத்தவள்: "நான் கவிக்காய் யோசித்து வைத்த வார்த்தைகளை கலைக்கும் பொருட்டு என்னுள் நுழைய முயன்ற அவள் முடியாமல் போகவே என் எழுதுகோல் வழி நுழைந்து நான் எழ..."

பஞ்சவர்ணசோலை: வினை ஒடுக்கம்

பஞ்சவர்ணசோலை: வினை ஒடுக்கம்: "காலில் விழுந்த ஒரு துளி என் உணர்வுகளை உயிர்ப்பித்ததோடு அல்லாமல் குனிந்த படி அமர்ந்திருந்த என் தவத்தையும் கலைத்தது . யாருமற்ற வெளியில் எல்லைக..."

பஞ்சவர்ணசோலை: சிதறல்கள்

பஞ்சவர்ணசோலை: சிதறல்கள்: "* 'எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பு' எனும் என் புத்தகத்தின் முகப்பு உன் வருகை. * நீர்க்குமிழிக்குள் அடைபட்டிருக்கும் காற்று என் ..."

Tuesday, October 26, 2010

தேடல்

நீளும் நான் தேடலில் 
மீளும் எச்சமே நான்.