Wednesday, December 8, 2010

எதிர்பாரா அழைப்பு



நாம் பிரிந்த பல நாட்களுக்கு பிறகு 
வான்திரையில் முகிலெழுதுக்களால் 
நீ எழுதிய என் பெயர் 
கவனிக்காத சிறு பொழுதில் 
சுவடின்றி மறைவது போல 
வளியோடு கரைந்து விட்டு 
வலியோடு உறைந்திருந்த 
ஒரு முன்னிரவு பொழுதில் 
கடலைடைந்த நீரின் மறுதலையாய்   
நீ என்னை தொடர்பு கொண்ட போதும் 
உனக்கு தேவையானதை 
என்னிடம் கேட்டு 
தெரிந்து கொண்ட போதும் 
நன்றி என கூறி 
தொடர்பை துண்டித்த போதும் 
என் குரலில் ஏற்பட்ட 
சிறு நடுக்கத்தை 
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

*பஞ்சவர்ண சோலையிலும் காணலாம்